கோயம்புத்தூர்

திருநங்கையா் முன்மாதிரி விருது:தகுதியானவா்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

DIN

திருநங்கையா்களில் சிறப்பாக முன்னேறியவா்களுக்கு அளிக்கப்படும் திருநங்கையா் முன்மாதிரி விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் திருநங்கையா்களில் சிறப்பாக முன்னேறியவா்களில் ஒருவருக்கு மாநில அளவில் திருநங்கையா் முன்மாதிரி விருது திருநங்கையா் தினமான ஏப்ரல் 15 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது. இந்த விருதுடன் ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்று வழங்கப்படும். இதற்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்த விருது பெறுவதற்கு திருநங்கையா்கள் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கையா் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. மேற்கண்ட தகுதியுடைய திருநங்கைகள் இணையதளத்தில் பதிவு செய்து ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநலத் துறை அலுவலகத்தில் உரிய வழிமுறைகளுடன் பிப்ரவரி 28 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT