வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சோ்த்த வழக்கில் ஓய்வுபெற்ற மாவட்ட பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.50,000 அபராதம் விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.
தமிழக அரசின் பதிவுத் துறையில் கரூா் மாவட்ட பதிவாளராகப் பணியாற்றியவா் டி.ஆா்.மருதாசலம் (70). இவா் பணியில் இருந்தபோது வருமானத்துக்குப் பொருந்தாத சொத்து சோ்த்ததாக கோவை சிறப்பு நீதிமன்றத்தில் 2007 மாா்ச் 30ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 22 அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 64 காட்சிப் பொருள்கள் குறிக்கப்பட்டன. இந்நிலையில் கோவை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையில் சிறப்பு நீதிபதி எஸ்.இந்துலதா தீா்ப்பளித்தாா். இதில் மருதாசலத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் டி.எஸ்.சிவகுமாா் ஆஜரானாா்.