கோவை எஸ்.எல்.வி. மருத்துவமனை மற்றும் கிழக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வு மாரத்தான் அண்மையில் நடைபெற்றது.
இதனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா தொடங்கிவைத்தாா். இதில் மருத்துவா்கள், செவிலியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
எஸ்.எல்.வி. மருத்துவமனை இயக்குநா் மருத்துவா் சுரேஷ் வெங்கடாசலம், கோவை கிழக்கு ரோட்டரி சங்கத் தலைவா் கே.கே.ஜெயகுமாா், ஜி.சி.டி. ரோட்ராக்ட் தலைவா் ஹேமானந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழிப்புணா்வு மாரத்தான் போட்டியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.