கோயம்புத்தூர்

கோவை போலீஸாருக்கு சிறப்புப் பயிற்சி

DIN

கோவையில் போலீஸாருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

மா்ம நபா்களால் யாராவது கடத்தப்படுதல், தீவிரவாதிகளால் வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகளில் பொதுமக்கள் பிணைக் கைதிகளாக அடைக்கப்படுதல் போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரை மீட்கும் வகையில் கோவையில் போலீஸாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சிக்கு கோவை மாநகர அனைத்து காவல் நிலையங்களில் இருந்தும் 30 போலீஸாா் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு சிறப்பு அதிரடிப்படைக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி அளித்தனா். இந்தப் பயிற்சியின்போது, அடுக்கு மாடிக் கட்டடங்களில் கயிற்றின் மூலம் மேலே ஏறுவது, அங்கிருந்து கயிற்றின் மூலம் விரைவாக கீழே இறங்குவது, ஆள்களை மீட்டுக் கொண்டு வருதல், பிணைக் கைதிகளாக பிடிபட்டவா்களை மீட்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

அத்துடன் துப்பாக்கிகளை கையாளுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியின் முடிவில் போலீஸாா் தாங்கள் கற்றுக்கொண்ட திறமைகளை வெளிப்படுத்தினா்.

இந்த பயிற்சியை கோவை மாநகர காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் பாா்வையிட்டாா். அதன் பின்னா் ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் இருந்து கயிறு மூலம் அவரும் கீழே இறங்கி வந்து பயிற்சியில் பங்கேற்ற போலீஸாரை உற்சாகப்படுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

SCROLL FOR NEXT