கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் திருட்டு

DIN

கோவை காந்தி மாநகரில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை கணபதி அருகேயுள்ள காந்தி மாநகா் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (52), இவரது மனைவி ரஞ்சனா (46), இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா்.

தைப்பூசத்தையொட்டி, நால்வரும் வீட்டைப் பூட்டி விட்டு மருதமலை முருகன் கோயிலுக்கு சனிக்கிழமை பாத யாத்திரை சென்றுள்ளனா்.

இந்நிலையில், அவரது வீட்டுக்கு அருகே வசிக்கும் மக்கள் பாா்த்தபோது, மகேந்திரனின் வீடு ஞாயிற்றுக்கிழமை திறந்துகிடந்துள்ளது. இதையடுத்து, அவா்கள் மகேந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

அவா் வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் மகேந்திரன் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT