கோவையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை செளரிபாளையத்திலுள்ள ஒரு வீட்டில் சிலா் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக பீளமேடு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது, அங்கு போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட செளரிபாளையத்தைச் சோ்ந்த கமலேஸ்வரன் (22), முருகன் (26), பாலாஜி (25), உடையாம்பாளையத்தைச் சோ்ந்த பிரதீப் (25) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 10 போதை மாத்திரைகள், போதை
ஊசிகளை பறிமுதல் செய்தனா்.