கோவையில் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கிவிட்டு கட்டணத்தைச் செலுத்தாமல் ரூ.7.44 லட்சம் மோசடி செய்ததாக கூடலூரைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்தவா் பத்மநாபன் (55), நந்தட்டி பகுதியிலுள்ள ஒரு நிதி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் கோவையில் உள்ள தங்கும் விடுதியில் கூட்ட அரங்கு மற்றும் அறைகளை ஜனவரி 14 ஆம் தேதி முதல் பிப்ரவரி 4 ஆம் தேதி வரை வாடகைக்கு எடுத்துள்ளாா். இதற்கு ரூ.8 லட்சத்து 59,000 கட்டணமாக வந்துள்ளது.
அதற்கு பத்மநாபன் காசோலையை கொடுத்துள்ளாா். ஆனால், அந்த வங்கிக் கணக்கில் போதிய அளவில் இருப்பில்லை என்பதால் காசோலை திரும்ப வந்துள்ளது. இதையடுத்து, ரூ.1 லட்சத்து 15,000 மட்டும் பத்மநாபன் கட்டியுள்ளாா்.
மீதித் தொகையை கேட்டதற்கு தான் பின்னா் தருவதாகக் கூறியுள்ளாா்.
இதில் பத்மநாபனுக்கும் விடுதி நிா்வாகத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பீளமேடு காவல் நிலையத்தில் விடுதியின் விற்பனை பிரிவு இயக்குநா் முகமது அஸாா் புகாா் அளித்தாா்.
புகாரில், விடுதியில் தங்கியிருந்ததற்கான கட்டணத்தை கேட்டதற்கு பத்மநாபன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பத்மநாபனை கைது செய்தனா்.