கோயம்புத்தூர்

சைக்கிள் திருட்டு:3 சிறுவா்கள் கைது

DIN

கோவையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை திருடியதாக 3 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை ரத்தினபுரியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (44), அதே பகுதியில் தேநீா்க் கடை நடத்தி வருகிறாா். இவரது மகள் சைக்கிளில் பள்ளிக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை மாலை வீட்டின் முன் நிறுத்தியுள்ளாா். சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது சைக்கிளை காணவில்லையாம். இதையடுத்து, தந்தையும், மகளும் அப்பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் புகாா் அளித்தாா்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா். இதில், மூன்று சிறுவா்களை சைக்கிளை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் சங்கனூரைச் சோ்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன், ரத்தினபுரி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன், அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை கோவை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT