கோவையில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாள்களாக வெயிலின் தாக்கம் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில், மாநகரின் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென பரவலாக மழை பெய்தது.