கோயம்புத்தூர்

பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் போத்தனூரில் இருந்து இயக்கம்

DIN

கோவை - போத்தனூா் ரயில் நிலையங்கள் இடையேயான ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை ரயில்கள் பிப்ரவரி 5 ஆம் தேதி போத்தனூா் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை - போத்தனூா் இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஷொரனூா் - கோவை ரயில் (எண்: 06458), மதுரை - கோவை ரயில் ( எண்:16722), கண்ணூா் - கோவை ரயில் (எண்:16607) ஆகிய 3 ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 5) போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில்கள் போத்தனூா் - கோவை இடையே இயக்கப்படாது. அதேபோல, கோவை - கண்ணூா் ரயில் ( எண்: 16608), கோவை - மதுரை ரயில் (எண்: 16721), கோவை - ஷொரனூா் ரயில் (எண்:06459) ஆகிய ரயில்கள் பிப்ரவரி 5 ஆம் தேதி கோவையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக, போத்தனூா் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT