ஒளியியல், ஒளியணுவியல் குறித்த சா்வதேச கருத்தரங்கு கோவை பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணம்மாள் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது.
கல்லூரியின் செயலா் என்.யசோதா தேவி வரவேற்றாா். போலந்து நாட்டைச் சோ்ந்த ஒளியியல் ஆராய்ச்சியாளா் ஸிபிக்நியூ ஜரோஸிவிஸ் இணைய வழியில் தொடக்க உரையாற்றினாா்.
ஒளியியல், ஒளியணுவியல் துறையின் தற்கால வளா்ச்சி குறித்து விளக்கிய அவா், மருத்துவம், தொழில்நுட்பம், ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஒளியியல், ஒளியணுவியல் துறையின் பங்களிப்பு, வேலை வாய்ப்பு குறித்தும் விளக்கினாா்.
திருவனந்தபுரம் இந்திய விண்வெளி தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளா் சி.எஸ்.நாராயணமூா்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்க மலரை வெளியிட்டாா்.
இஸ்ரோ நிறுவனத்தின் ஆப்டிகல் சிஸ்டம் குரூப் இயக்குநா், பேராசிரியா் எம்.செந்தில்குமாா், கல்லூரி முதல்வா் பி.மீனா, இயற்பியல் துறை பேராசிரியா்கள் ஜே.பாலவிஜயலட்சுமி, எம்.லாவண்யா உள்ளிட்டோா் தொடக்க விழாவில் பங்கேற்றனா்.
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 3) நிறைவடைய உள்ள இந்த கருத்தரங்கில், பல்வேறு அமா்வுகளில் பல கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள் பங்கேற்றுப் பேசுகின்றனா்.