கோவை எஸ்.என்.எஸ். செவிலியா் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான விளக்கேற்றும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
செவிலியா் மாணவா்கள் மருத்துவமனை பயிற்சிக்கு செல்லும் முன்பு துறையின் முன்னோடியான ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூா்ந்து உறுதிமொழியேற்பது வழக்கம். அதன்படி, நடைபெற்ற விளங்கேற்றும் விழாவை கல்லூரியின் தலைவா் எஸ்.என்.சுப்பிரமணியன், தொழில்நுட்ப இயக்குநா் நளின் விமல்குமாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
கேஎம்சிஹெச் செவிலியா் கல்லூரியின் முதல்வா் எஸ்.மாதவி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா். எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வா் செந்தூா்பாண்டியன், மருந்தியல் கல்லூரியின் முதல்வா் சதீஷ்குமாா், செவிலியா் கல்லூரியின் முதல்வா் கவிதா, துணை முதல்வா் பாரதி ஆகியோா் விளக்கேற்றினா். இதைத் தொடா்ந்து, செவிலியா் மாணவா்கள் உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.