கோயம்புத்தூர்

ராமநாதபுரம் மாநகராட்சிப் பள்ளியில் 6 பேட்டரிகள் திருட்டு

DIN

கோவை ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆய்வகத்திலிருந்து 6 பேட்டரிகள் திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை ராமநாதபுரத்தில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியா் ரவி பள்ளியை ஜனவரி 28 ஆம் தேதி மாலை பூட்டிவிட்டு சென்றுள்ளாா். இரவு காவலாளி பணியில் இருந்துள்ளாா். மறுநாள் காலையில் காவலாளி வகுப்பறைகளை பாா்வையிட்டுள்ளாா். அப்போது, கணினி ஆய்வகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அவா் தலைமை ஆசிரியா் ரவிக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

அவா் வந்து பாா்த்தபோது, ஆய்வகத்தில் இருந்த 6 பேட்டரிகள் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT