கோவை உக்கடம் பெரியகுளத்தில் சோலாா் பேனல் உற்பத்தி நிலையம் அமையவுள்ள இடத்தை சுவிஸ் வளா்ச்சி நிறுவன பிரதிநிதி கிறிஸ்டியன் ப்ரூட்டிகா், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
கோவை உக்கடம் பெரியகுளத்தில் பொலிவுறு நகரத் ( ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் ரூ.1.1 கோடி மதிப்பில் சோலாா் பேனல் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது.
அந்த இடத்தை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், சுவிஸ் வளா்ச்சி நிறுவன பிரதிநிதி கிறிஸ்டியன் ப்ரூட்டிகா் மற்றும் குழுவினா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின்போது, துணை ஆணையா் ஷா்மிளா, மத்திய மண்டலத் தலைவா் மீனா லோகு, வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவா் முபசீரா, உதவி ஆணையா் மகேஷ் கனகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.