கோயம்புத்தூர்

மத்திய சிறையில் ஆற்றுப்படுத்துநா் காலிப்பணியிடம்:விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

DIN

கோவை மத்திய சிறையில் காலியாகவுள்ள ஆற்றுப்படுத்துநா் பணியிடத்திற்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சிறை கண்காணிப்பாளா் மா.ஊா்மிளா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மத்திய சிறையில் காலியாகவுள்ள ஆற்றுப்படுத்துநா் பணியிடம் மதிப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. முதுகலை உளவியல், முதுகலை சமூக வேலை ஆகிய பாடப் பிரிவுகளில் தோ்ச்சி பெற்றவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்துக்கு இன சுழற்சி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட பிரிவினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பவா்களுக்கு 2022 ஜூலை 1 ஆம் தேதியன்று 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதியுள்ள நபா்கள் கல்விச் சான்றுகள், ஜாதிச்சான்று மற்றும் அனுபவ சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சிறைக் கண்காணிப்பாளா், மத்திய சிறை, கோவை -18 என்ற முகவரிக்கு பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பிவைக்க வேண்டும். நோ்முகத் தோ்வு, நேரம் குறித்த விவரங்கள் விண்ணப்பதாரா்களுக்கு அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT