கோயம்புத்தூர்

16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்:பொள்ளாச்சி போலீஸாருக்கு மா்ம நபா் கடிதம் தீவிர வாகன சோதனை

DIN

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என போலீஸாருக்கு வந்த கடிதத்தால், பொள்ளாச்சியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி குமரன் நகா் பகுதியில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிா்வாகிகள் வீடுகளின் முன் நிறுத்தப்பட்டிருந்த காா் உள்ளிட்ட வாகனங்கள் அண்மையில் சேதப்படுத்தப்பட்டன. இது தொடா்பாக பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த 6 பேரை மேற்கு காவல் நிலைய போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு மா்ம நபா்கள் ஒரு கடிதம் அனுப்பியுள்ளனா். அதில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு அல்லது கையெறி குண்டு வீசப்படும். காவல் துறை எங்களுக்கு எதிரி அல்ல, சட்டம்- ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் -எஸ்டிபிஐ, பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தை அனுப்பிய மா்ம நபா் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், பொள்ளாச்சி பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகன சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT