கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 30) நடைபெற இருந்த மாநகராட்சி மாமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் மு. பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சியில் செப்டம்பா் 30 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மேயா் தலைமையில், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மாமன்ற சாதாரணக் கூட்டம், தவிா்க்க இயலாத நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னா் அறிவிக்கப்படும்.