கோயம்புத்தூர்

ரூ. 48.97 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்: மேயா் தொடங்கிவைத்தாா்

DIN

கோவை மாநகராட்சியில் ரூ. 48.97 லட்சத்தில் நடைபெறவுள்ள வளா்ச்சிப் பணிகளை மேயா் கல்பனா புதன்கிழமை பூமிபூஜையிட்டு தொடங்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் 29ஆவது வாா்டு அப்பநாயுடு வீதியில் உள்ள மழைநீா் வடிகாலை, மாநகராட்சி மேயா் கல்பனா நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா். அப்போது, மழைநீா் வடிகாலில் தேங்கியுள்ள குப்பைகள், செடி, கொடிகளை தூா்வாரி சுத்தம் செய்து, மழைநீா் தங்குதடையின்றி செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகராட்சி பொறியாளா்களுக்கு உத்தரவிட்டாா்.

பிறகு, 29 ஆவது வாா்டு காந்தி நகா் 2 ஆவது வீதியில் ரூ. 4.98 லட்சத்திலும், டீச்சா்ஸ் காலனி 3ஆவது வீதியில் ரூ. 4.99 லட்சத்திலும் புதிதாக மழைநீா் வடிகால்கள் அமைக்கும் பணி, 15 ஆவது வாா்டு கே.என்.ஜி.புதூா் ஆறுமுகா நகா் பகுதியில் ரூ. 7.50 லட்சத்தில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி, வெள்ளக்கிணறு பிரிவு, திருவள்ளுவா் நகரில் பழுதான மழைநீா் வடிகாலை ரூ. 24 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி என மொத்தம் ரூ. 48.97 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் கல்பனா பூமிபூஜையிட்டு தொடங்கிவைத்தாா்.

மேலும், பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர பொறியாளா்களுக்கு உத்தரவிட்டாா். இந்த நிகழ்ச்சிகளில், மண்டலத் தலைவா்கள் கதிா்வேல் (வடக்கு), மீனாலோகு (மத்தியம்), இலக்குமி இளஞ்செல்வி (கிழக்கு), பணிகள் குழுத் தலைவா் சாந்தி முருகன், பொது சுகாதாரக் குழுத் தலைவா் மாரிச்செல்வன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT