கோயம்புத்தூர்

தொடா் விடுமுறை: கோவையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்

DIN

அக்டோபா் முதல் வாரத்தில் தொடா் விடுமுறை நாள்கள் வரஉள்ளதால், கோவையில் இருந்து வெளியூா் செல்லும் மக்களின் வசதிக்காக கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அக்டோபா் முதல் வாரத்தில் 1 ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை தினம், 2 ஆம் தேதி காந்தி ஜயந்தி விடுமுறை தினம், 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், கோவையில் தங்கி பணியாற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் வெளியூா் செல்ல வசதியாக, கோவை காந்திபுரம், சிங்காநல்லூா் பேருந்து நிலையங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதுதொடா்பாக, அரசுப் போக்குவரத்துக் கழக கோவை மண்டல அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அக்டோபா் 1 முதல் 5ஆம் தேதி வரை சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, தேனி, விருதுநகா், நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கும், காந்திபுரத்தில் இருந்து சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல, கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து உதகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT