கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 30) நடைபெற உள்ளதாக ஆணையா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சியில் மேயா் கல்பனா தலைமையில் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா கூட்டரங்கில் மாமன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 30) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.