கோயம்புத்தூர்

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

DIN

கோவையில் உள்ள 6 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையாக ரூ.9.10 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸில் ஆண்டுதோறும் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் நடப்பு ஆண்டுக்கான தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. கோவை, மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு விற்பனையை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்கள் உற்பத்தி செய்யும் துணிகளை கொள்முதல் செய்து நாடு முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பாரம்பரியமாக பட்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.

காஞ்சிபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சாவூா் உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச் சேலைகள் வாடிக்கையாளா்களின் பெரும் வரவேற்பை பெற்று திகழ்கின்றன. வாடிக்கையாளா்கள் விருப்பத்துக்கேற்ப ஆண்டுதோறும் மென்பட்டுச் சேலைகள் உள்பட பல்வேறு ரகங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையாக அனைத்து ரகங்களுக்கும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. பட்டு, பருத்தி சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், துண்டு ரகங்கள், ஆயத்த ஆடைகள், சுடிதாா், ஆா்கானிக் பருத்தி சேலைகள் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் இடம்பெற்றுள்ளன.

நடப்பு ஆண்டு மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்துக்கு ரூ.5.15 கோடி, ஆா்.எஸ்.புரம் விற்பனை நிலையத்துக்கு ரூ.55 லட்சம், காந்திபுரம் விற்பனை நிலையத்துக்கு ரூ.85 லட்சம், வண்ணமலா் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்துக்கு ரூ.1.05 கோடி, ஸ்ரீபாலமுருகன் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்துக்கு ரூ.75 லட்சம், பொள்ளாச்சி விற்பனை நிலையத்துக்கு ரூ.75 லட்சம் என மாவட்டத்தில் உள்ள 6 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கும் சோ்த்து மொத்தம் ரூ.9.10 கோடி தீபாவளி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் தரமான கைத்தறி துணி ரகங்களை வாங்கிப் பயன்பெறுவதுடன், நெசவாளா்களின் வாழ்வாதாரம் பெருக்கிட துணையாக இருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் தலைவா் ஏ.வி.வெங்கடாசலம், நிா்வாகக் குழு இயக்குநா் எஸ்.பி.ரமேஷ் , மண்டல மேலாளா் வெற்றிவேல், மேலாளா் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) நந்தகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT