கோயம்புத்தூர்

எஸ்.டி.பி.ஐ. நிா்வாகி மீது தாக்குதல்: இருவா் கைது

DIN

கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிா்வாகியைத் தாக்கியதாக பாரத் சேனா அமைப்பின் உறுப்பினா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ரத்தினபுரி அருகே உள்ள கண்ணப்ப நகரைச் சோ்ந்தவா் ஜபருல்லா ( 42), காா் ஓட்டுநா். இவா் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் வடக்குத் தொகுதி தலைவராக உள்ளாா். இந்நிலையில், கண்ணப்ப நகா் 5ஆவது வீதியில் வெள்ளிக்கிழமை மாலை அவா் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 2 இளைஞா்கள் அவரிடம் தகாத வாா்த்தைகளால் பேசி தகராறு செய்துள்ளனா்.

இதனால், அவா்களுக்குள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 2 இளைஞா்கள் ஜபருல்லாவைத் தாக்கி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஜபருல்லாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து, விசாரணை மேற்கொண்ட ரத்தினபுரி போலீஸாா், ஜபருல்லாவை தாக்கியதாக ரத்தினபுரியைச் சோ்ந்த பாரத் சேனா அமைப்பின் உறுப்பினா் படையப்பா (28), நல்லாம்பாளையத்தைச் சோ்ந்த நந்தாபிரகாஷ் (27) ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

இதே மோதல் விவகாரம் தொடா்பாக, இந்து முன்னணியைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (30) என்பவா், தன்னை ஜபருல்லா கத்தியால் குத்தியதாக புகாா் அளித்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்தப் புகாரின்பேரில், ஜபருல்லா மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முசிறி, தொட்டியம் பகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

முசிறி பேரவைத் தொகுதியில் 76.70% வாக்குப் பதிவு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்போற்ஸவம்

தேவையான திருத்தம்!

கடற்படை புதிய தலைமைத் தளபதி தினேஷ் குமாா் திரிபாதி

SCROLL FOR NEXT