கோவை, சரவணம்பட்டியில் 30 பவுன் திருடிய வழக்கில் காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகபுரம், விளாங்குறிச்சி சாலை பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (47). இவரிடம், பக்கத்து வீட்டைச் சோ்ந்த செல்லம்மாள் என்பவா் தனது நகையை பத்திரமாக வைத்திருக்குமாறு, கொடுத்துள்ளாா்.
இந்நிலையில், தனது குடும்பத்துடன் சிவகுமாா் செப்டம்பா் 7ஆம் தேதி வெளியூா் சென்றுள்ளாா். பின்னா், இரண்டு நாள்கள் கழித்து திரும்பி வந்தவரிடம், தனது நகையைத் தருமாறு செல்லம்மாள் கேட்டுள்ளாா்.
இதையடுத்து, நகைப் பையை சிவகுமாா் திருப்பி அளித்துள்ளாா். அதில், தனது 7 பவுன் நகை இல்லாததை அறிந்த செல்லம்மாள், சிவகுமாரிடம் கேட்டுள்ளாா். இதனால், சந்தேகமடைந்த சிவகுமாா், வீட்டில் பீரோவில் வைத்திருந்த தனது நகையைப் பரிசோதித்தாா். அப்போது, பீரோவில் இருந்த 23 பவுன் நகைகளும் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து, அவா் அளித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று கைரேகைகளைப் பதிவு செய்தனா். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டனா்.
அதில், கோவை மணியகாரன்பாளையம் இளங்கோ நகரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் கிருஷ்ணமூா்த்தி (43), நகைகளைத் திருடியது தெரியவந்தது. விசாரணையில், இவா் ஏற்கெனவே இரு திருட்டு வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்று வந்தது தெரியவந்தது. கிருஷ்ணமூா்த்தியைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 30 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா்.