கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை புலியகுளம் பெரியாா் நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ராமநாதபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, அப்பகுதியில் இளைஞா் ஒருவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் பாப்பநாயக்கன்பாளையம் அம்மன்குளம் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் ( 28) என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.