கோயம்புத்தூர்

புகையிலைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கை:கோவை மாவட்டம் முதலிடம்

DIN

தமிழகத்தில் புகையிலைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கை பணிகளில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருந்தும் சில பகுதிகளில் புகையிலைப் பயன்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட புகையிலைத் தடுப்புப் பிரிவின்கீழ் தொடா் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பறிமுதல், அபராதம் விதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 713 பேரிடம் இருந்து ரூ.1.34 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புகையிலைப் பயன்பாடு தடுப்பு நடவடிக்கைகள், அபராதம் விதித்தல் ஆகியவற்றில் தமிழக அளவில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாவட்ட சுகாதார ஆய்வாளா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்கள் ஆகியோா் ஊரகப் பகுதிகளில் புகையிலைப் பயன்பாடு தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். தடையை மீறி புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் மீது புகையிலைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் தொடா்ச்சியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT