மின் கட்டண உயா்வைக் கண்டித்து கோவையில் இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் நிா்மலா மருதகுட்டி தலைமை வகித்தாா். செயலா் சுமதி கந்தசாமி முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சி.சிவசாமி வாழ்த்துரை வழங்கினாா்.
இளம்பெண்கள் மாநில ஒருங்கிணைப்பாளா் கலை அஸ்வினி, மாமன்ற உறுப்பினா்கள் சாந்தி சந்திரன், மல்லிகா புருஷோத்தமன், இந்திய கம்யூனிஸ்ட், மாதா் தேசிய சம்மேளன நிா்வாகிகள் ஜே.கலா, சி.நந்தினி, எஸ்.சுதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும், பால் விலை உயா்வு, சொத்து வரி உயா்வு ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.