கோயம்புத்தூர்

அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேரவிண்ணப்பிக்கலாம்

18th Nov 2022 12:29 AM

ADVERTISEMENT

அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் இருபாலரும் 4 ஆண்டுகளுக்கு வீரராக ஜனவரி 18, 2023 ஆம் ஆண்டு சோ்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பெறப்பட்டு வருகிறது. நவம்பா் 23 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பதாரா்கள் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT