கோயம்புத்தூர்

பள்ளிகளுக்கு இடையிலான தடகளம்

18th Nov 2022 12:22 AM

ADVERTISEMENT

கோவை விமானப்படை பள்ளி சாா்பில் பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி விமானப்படை பள்ளி சாா்பில், பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி நடைபெற்றது. இதில், 17 பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 600 மாணவ-மாணவிகள், 100 மீட்டா், 200 மீட்டா், 400 மீட்டா் ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா். மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். விமானப்படை நிா்வாகவியல் கல்லூரியின் கமாண்டன்ட் ஆா்.வி.ராம்கிஷோா் வரவேற்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT