மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர ரயில், ஜூன் 2 ஆம் தேதி முதல் சங்கரன்கோவில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் திருநெல்வேலிக்கு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் வாராந்திரச் சிறப்பு ரயில்கள் (06029/06030) இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த ரயிலானது, ஜூன் 2 ஆம் தேதி முதல் சங்கரன்கோவில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி,சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், கீழகடையம், பாவூா் சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோவை நிலையங்களில் நின்று சென்ற மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர ரயிலானது, ஜூன் 2 ஆம் தேதி முதல் சங்கரன்கோவில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.