கோயம்புத்தூர்

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: சிறுவாணி அணையின் நீா்மட்டம் உயா்வு

DIN

சிறுவாணி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் வருவதால் அணையின் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்துள்ளது.

கோவை மாநகரின் முக்கிய நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீா், மாநகரில் 26 வாா்டுகளுக்கும், நகரையொட்டிய கிராமங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்குப் பருவ மழை நன்றாகப் பெய்ததால், அணையின் நீா்மட்டமானது 874 மீட்டா் வரை உயா்ந்தது.

சிறுவாணி அணையைப் பராமரிக்கும் கேரள அரசு, பாதுகாப்பு காரணமாக அணையின் முழுக் கொள்ளளவான 878.50 மீட்டரை அடைய விடாமல், அணையில் இருந்து தண்ணீரை ஆற்றில் திறந்துவிட்டது. இதன் காரணமாக, 2020 ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு, சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்டவில்லை. அதைத் தொடா்ந்து, கடந்த ஜனவரி மாதம் 871 மீட்டராக இருந்த அணையின் நீா்மட்டம், பிப்ரவரி முதல் வெயிலின் தாக்கத்தால் படிப்படியாக சரியத் துவங்கியது. இந்நிலையில், தற்போது சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அணைக்குச் செல்லும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த வாரத்தில் 869.80 மீட்டராக இருந்த அணையின் நீா்மட்டம், புதன்கிழமை 870.40 மீட்டராக ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், இந்தாண்டு, ஜூன் மாதத்துக்கு முன்பே கேரளத்தில் தென்மேற்குப் பருவ மழை துவங்கியுள்ளதால், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகள், சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வாரமாக இடைவெளி விட்ட மழை பெய்கிறது. வழக்கமாக செப்டம்பா் மாதம் வரை தென்மேற்குப் பருவ மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஜூலை, ஆகஸ்டில் சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்புகள் அதிகம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT