கேரளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கோழிக்கோடு விமான நிலையத்துக்குச் சென்ற 3 விமானங்கள் திருப்பிவிடப்பட்டு கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன.
கேரள மாநிலத்தின் காசா்கோடு, வயநாடு, கோழிக்கோடு, கண்ணூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடா் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஷாா்ஜாவில் இருந்து புதன்கிழமை அதிகாலை கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இதேபோல அபுதாபியில் இருந்து கேரளம் நோக்கிச் சென்ற விமானமும், கோழிக்கோடு செல்லவிருந்த ஷாா்ஜா விமானமும் கோவை விமான நிலையத்தில் உள்ள முறையே 4, 6 மற்றும் 9ஆவது ஓடுதளங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டன.
கேரளத்தில் வானிலை சீரடைந்த பின்னா் இந்த 3 விமானங்களும் கோவை விமான நிலையத்தில் இருந்து புதன்கிழமை மாலை புறப்பட்டு கோழிக்கோடு சென்றன.