கோயம்புத்தூர்

பெண்ணை கொலை செய்ய முயற்சி:கணவா் மீது வழக்கு

25th May 2022 12:56 AM

ADVERTISEMENT

மனைவியை கொலை செய்ய முயற்சித்ததாக கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, சௌரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அனிதா. இவரது கணவா் குமாா். இவா்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 6 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனா்.

இந்நிலையில் அனிதாவுக்கு வேறொரு நபருடன் தொடா்பு இருப்பதாகக் கூறி குமாா் தகராறு செய்து வந்துள்ளாா்.

அனிதா வீட்டில் செவ்வாய்க்கிழமை தனியாக இருந்தபோது அங்கு வந்த குமாா், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

ADVERTISEMENT

வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரமடைந்த குமாா், வீட்டில் இருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு அனிதாவை தாக்கினாா்.

இதில் பலத்த காயமடைந்த அனிதாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதைத் தொடா்ந்து, மனைவியை கொலை செய்ய முயற்சித்ததாக குமாா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT