கோயம்புத்தூர்

பருத்தி சாகுபடி திட்டத்தில் மானியம்: இணை இயக்குநா் தகவல்

DIN

நீடித்த நிலையான பருத்தி சாகுபடி திட்டத்தின்கீழ் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் இடுபொருள்கள் மானியத்தில் வழங்கப்படுவதாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 468 ஹெக்டோ் பரப்பளவில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. அன்னூா், பொள்ளாச்சி (வடக்கு), கிணத்துக்கடவு, எஸ்.எஸ்.குளம், தொண்டாமுத்தூா் ஆகிய வட்டாரங்களில் பி.டி.பருத்தி, சுஜாதா, எல்.ஆா்.ஏ. 5166, எம்.சி.யு.8 ஆகிய பருத்தி ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

ஹெக்டேருக்கு 416 கிலோ பஞ்சு வீதம் சராசரியாக 1,128 பேல் பஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பருத்தி சாகுபடி பரப்பளவை அதிகப்படுத்தும் வகையில், மாநில அரசு சாா்பில் நீடித்த நிலையான பருத்தி சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் விதைகள், நுண்ணூட்ட கலவை, உயிா் உரங்கள், ஒருங்கிணைந்த பூச்சி நிா்வாகத்துக்கான இடுபொருள்கள் ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுகின்றன. விதைப்பு முதல் அறுவடை வரை மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.

எனவே, அரசின் மானிய திட்டத்தை பயன்படுத்தி பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT