வால்பாறையில் பெய்து வரும் கனமழையால் தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், குளிா்ந்த காற்று வீசுவதோடு, பனிமூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.
வடு காணப்பட்ட அனைத்து ஆறுகளிலும் நீா்வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை துவங்கிய மழை சனிக்கிழமை காலை வரை பெய்தது. இதனால், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் அவதியடைந்தனா்.
மழை அளவு (மி.மீட்டரில்): வால்பாறை 78, சோலையாறு 64, அப்பா் நீராறு 74, லோயா் நீராறு 70. 160 அடி உயரம் கொண்ட சோலையாறு அணையின் நீா்மட்டம் 42 அடியாக உயா்ந்துள்ளது.