கனரா வங்கியின் ’சுலப்’ கிளையை நிா்வாக இயக்குநா் சத்தியநாராயண ராஜு துவக்கிவைத்தாா்.
கோவையில் கனரா வங்கி, சிறு, குறு தொழில்முனைவோருக்கு உதவும் தனது புதிய சுலப் கிளை சேவையை அறிமுகப்படுத்தியது.
வங்கியின் சென்னை வட்டார முதன்மைப் பொது மேலாளா் எஸ்.ராமசுப்பிரமணியன், கோவை 2 ஆவது மண்டல மேலாளா் டி.சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிா்வாக இயக்குநா் கே.சத்தியநாராயண ராஜு இந்த கிளையைத் துவக்கிவைத்தாா். இதில், தலைமை அலுவலக பொது மேலாளா் எம்.ஜி.பண்டிட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.