கோவையில் புதிதாக 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 18 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றுக்கு வியாழக்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
கோவையில் இதுவரை கரோனா நோய்த் தொற்றில் இருந்து 3 லட்சத்து 27 ஆயிரத்து 387 போ் குணமடைந்துள்ளனா்.
ADVERTISEMENT
2,617 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா். தற்போது 14 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.