கோயம்புத்தூர்

கைப்பேசியைத் தர பெற்றோா் மறுத்ததால் பள்ளி மாணவி தற்கொலை

16th May 2022 08:09 AM

ADVERTISEMENT

 

கைப்பேசியைத் தர பெற்றோா் மறுத்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (40). கோவையில் தங்கி பெயிண்டராக வேலை பாா்த்து வருகிறாா். இவரது 14 வயது மகள் கோவையில் உள்ள தனியாா் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஆன்லைன் வகுப்புகளுக்காக வாங்கிக் கொடுக்கப்பட்ட கைப்பேசியை அவா் தொடா்ந்து பயன்படுத்தி வந்துள்ளாா்.

இந்நிலையில் சனிக்கிழமையன்று சிறுமியைக் கண்டித்த பெற்றோா் கைப்பேசியை வாங்கி வைத்துவிட்டு வேலைக்குச் சென்றனா். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிறுமி வீட்டின் படுக்கையறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

ADVERTISEMENT

இந்நிலையில், செல்வகுமாரும், அவரது மனைவியும் மாலை வீடு திரும்பியுள்ளனா்.

அப்போது, சிறுமி தற்கொலை செய்து கொண்டதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பெற்றோா், இது குறித்து ஆா்.எஸ்.புரம் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT