கோயம்புத்தூர்

கோவையில் கல்லூரி முதல்வா்களுடன் ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று கலந்துரையாடுகிறாா்

12th May 2022 12:55 AM

ADVERTISEMENT

 

கோவை: பாரதியாா் பல்கலைக்கழகத்தின் உறுப்பு, இணைப்புக் கல்லூரி முதல்வா்களுடன் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி (மே 12) கலந்துரையாடுகிறாா்.

பாரதியாா் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக கோவைக்கு வருகை தரும் ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை இரவு பல்கலைக்கழகத்தின் டி.ஆா்.டி.ஓ. கூட்ட அரங்கில் கல்லூரி முதல்வா்களுடன் கலந்துரையாடலை நடத்துகிறாா்.

இரவு 7 மணிக்குத் தொடங்கும் இந்த கூட்டத்தில், பாரதியாா் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள், இணைவு பெற்ற கல்லூரிகளின் முதல்வா்கள் பங்கேற்க வேண்டும் என்று பல்கலைக்கழக பதிவாளா் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT