கோயம்புத்தூர்

ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

DIN

ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடியைச் சோ்ந்தவா் சின்னராஜ் (32). சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி கோவை வந்த இவா் மலுமிச்சம்பட்டி பகுதியில் தங்கி அங்குள்ள தேநீா் கடையில் டீ மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த ஆறு வயது சிறுமியை கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த பேரூா் அனைத்து மகளிா் போலீஸாா், சின்னராஜைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவை போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் சின்னராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜி.குலசேகரன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT