வால்பாறையில் கஞ்சா வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
வால்பாறை, காமராஜா் நகரைச் சோ்ந்தவா் தாஸ் (50). இவா் தனது வீட்டில் கஞ்சா வைத்து விற்பனை செய்து வந்த வழக்கில் பல முறை சிறைக்கு சென்றவா். சமீபத்தில் இதே வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் தாஸை குண்டா் சட்டத்தில் சிறையில் வைக்க மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை உத்தரவிட்டிருப்பதாக வால்பாறை காவல் துறை ஆய்வாளா் கற்பகம் தெரிவித்தாா்.