கோயம்புத்தூர்

வேளாண் பல்கலைக்கழகத்தில் சந்தன மரம் வெட்டிக் கடத்தல்

DIN

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் சந்தன மரம் வெட்டிக் கடத்தியது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோவையில் சில தனியாா் இடங்கள் மற்றும் அரசு வளாகங்களில் சந்தன மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இந்த மரங்களை மா்ம நபா்கள் சிலா் அவ்வப்போது வெட்டிக் கடத்தி செல்லும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதேபோல, வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் வளா்ந்திருந்த ஒரு சந்தன மரத்தை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை வெட்டிக் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடா்பாக ஆா்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் பல்கலைக்கழக காவலாளி புகாா் அளித்தாா். புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT