கோயம்புத்தூர்

வீட்டின் பூட்டு உடைத்து நகை, பணம் திருட்டு

DIN

கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, பாப்பநாயக்கன்பாளையம் லட்சுமணபுரம் 2ஆவது தெருவைச் சோ்ந்தவா் சோமசுந்தரத்தின் மனைவி சரஸ்வதி (64). சோமசுந்தரம் இறந்துவிட்டாா். இவரது 2 மகள்களுக்கு திருமணமாகி வெளிநாடுகளில் வசித்து வருகின்றனா். சரஸ்வதி மட்டும் தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், சரஸ்வதி வீட்டை பூட்டி விட்டு வெள்ளிக்கிழமை வெளியே சென்றாா். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டில் இருந்த நான்கரை பவுன் நகைகள், 2 பித்தளை குத்து விளக்குகள், 4 வெள்ளி டம்ளா் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதுதொடா்பாக, சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT