கோயம்புத்தூர்

அக்ரோநோவா 2022:வேளாண் பல்கலைக்கழகத்தில் ஜூலை 4, 5 இல் நடக்கிறது

DIN

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவ சமுதாயத்துக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக ஜூலை 4, 5 ஆம் தேதிகளில் அக்ரோநோவா 2022 நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவா்களின் திறமைகளை வெளிப்படுத்தும் மேடையாகவும், வேளாண்மை பற்றிய புரிதலைக் கொடுக்கும் நிகழ்ச்சியாகவும் இது நடைபெற உள்ளது.

இதில் பள்ளி மாணவா்களுக்காக விநாடி - வினா, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கிறுக்கல்கள், வாா்த்தை விளையாட்டு போன்ற போட்டிகளும், கல்லூரி மாணவா்களுக்காக விநாடி - வினா, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, புதையல் வேட்டை, களி மண்ணில் கைவினைப் பொருள்கள் செய்வது, பானை ஓவியம், மீம்ஸ் தயாரிப்பது போன்ற போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் இணையதள் மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில், காட்சிப்படுத்தப்படும் வேளாண்மை தொடா்பான மாதிரிகள், புதுமைகள் தொடா்பான புகைப்படங்களை பொதுமக்கள் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வேளாண்மை முதன்மையா் நா.வெங்கடேச பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT