கோயம்புத்தூர்

சா்தாா் வல்லபபாய் கல்லூரியில் ரத்த தான விழா

15th Jun 2022 12:57 AM

ADVERTISEMENT

கோவை சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச ஜவுளி, மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை ரத்த தான விழா நடைபெற்றது.

உலக ரத்த தான தினத்தையொட்டி கல்லூரி நிா்வாகம், அரிமா சங்கம் சாா்பில் ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடக்க விழாவில், கல்வி நிறுவனத்தின் இயக்குநா் பி.அல்லிராணி வரவேற்றாா்.

முகாமில், கல்வி நிறுவன பேராசிரியா்கள், நிா்வாகிகள், மாணவ-மாணவிகள் பலா் ரத்த தானம் செய்தனா். முன்னதாக ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து அரசு மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் டாக்டா் எம்.துரைக்கண்ணன் உரையாற்றினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT