கோவை மாவட்டத்தில் மேலும் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 95 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு செவ்வாய்க்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 436 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். 2,617 போ் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 42 போ் சிகிச்சையில் உள்ளனா்.