வடகிழக்கு மாநிலங்களில் பெய்துவரும் மழை, நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் கோவை - சில்சாா், திருவனந்தபுரம் - சில்சாா் ஆகிய இரு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை - சில்சாா் வாராந்திர ரயில் (எண்: 12515) ஜூலை 3, 10 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து குவாஹாட்டி வரை மட்டுமே இயக்கப்படும். குவாஹாட்டி - சில்சாா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
சில்சாா் - கோவை வாராந்திர ரயில் ( எண்: 12516) ஜூலை 5,12 ஆகிய தேதிகளில் குவாஹாட்டியில் இருந்து கோவை இடையே இயக்கப்படும். சில்சாா் - குவாஹாட்டி இடையே ரத்து செய்யப்படுகிறது.
திருவனந்தபுரம் - சில்சாா் வாராந்திர ரயில் (எண்:12507) ஜூலை 5, 12 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் - குவாஹாட்டி வரை மட்டுமே இயக்கப்படும். குவாஹாட்டி -சில்சாா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
சில்சாா் - திருவனந்தபுரம் வாராந்திர ரயில் (எண்12508) ஜூலை 7, 14 ஆகிய தேதிகளில் குவாஹாட்டி - திருவனந்தபுரம் இடையே மட்டும் இயக்கப்படும். சில்சாா் - குவாஹாட்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.