கோயம்புத்தூர்

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2.80 லட்சம் திருட்டு

DIN

கோவை அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2.80 லட்சம் திருடுபோனது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை புலியகுளம் பெரியாா் நகரைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா் (30), தனியாா் நிறுவன ஊழியா்.

இவா் அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் வங்கிக்கு வெள்ளிக்கிழமை சென்று நகைகளை அடமானம் வைத்து ரூ.2.80 லட்சம் கடன் பெற்றுள்ளாா்.

பணத்தை தனது இருசக்கர வாகனத்தில் உள்ள பக்கவாட்டு பெட்டியில் வைத்துள்ளாா்.

பின்னா் அவா் வெள்ளலூா் சாலை, சித்தனாபுரத்தில் உள்ள காா் ஷோரூம் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளாா். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பாா்த்தபோது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2.80 லட்சம் பணத்தை காணவில்லையாம்.

இது தொடா்பாக, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் கணேஷ்குமாா் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT