கோயம்புத்தூர்

முழு ஊரடங்கு: மாநகரில் கடை வீதிகள், சாலைகள் வெறிச்சோடின

DIN

கோவை: முழு ஊரடங்கால் கோவை மாநகரில் கடைவீதிகள், சாலைகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா, ஒமைக்ரான் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் 9ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி, 16ஆம் தேதி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் மாநகரில் சாலைகள் வெறிச்சோடின. வழக்கமாக வாகன நெரிசலுடன் காணப்படும் அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஆம்புலன்ஸ்கள், காய்கறி வாகனங்கள், உணவு வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. டவுன்ஹால், ரங்கே கவுடா் வீதி, ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் 100 அடி சாலை, கிராஸ்கட் சாலை பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் நிறைந்து காணப்படும் உக்கடம் மொத்த மற்றும்

சில்லறை மீன் சந்தைகள் வெறிச்சோடின. காந்திபுரம் மேம்பாலம், அவிநாசி மேம்பாலம், வடகோவை மேம்பாலம் உள்ளிட்ட பாலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மருந்தங்கள், பால் விற்பனையகம், பெட்ரோல் நிலையங்கள் மட்டுமே திறந்திருந்தன. உணவகங்களில் பாா்சல் சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டன. காவல் துறையின் நடவடிக்கைக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் முடங்கினா். விதிமீறி வாகனங்களில் சுற்றியவா்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைகோவுக்கு எதிரான வழக்கு: 4 மாதங்களில் முடிக்க உத்தரவு

‘மனிதனின் அறிவுப் பசியை போக்குபவை புத்தகங்கள்’

கரூா் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில்: வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவிப்பு

நயினாா் நாகேந்திரன் உதவியாளா்களிடம் பணம் பறிமுதல் விவகாரம்: அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

தளவாபாளையம் அருகே சாலை விபத்து: டிஎன்பிஎல் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT