வால்பாறை: வால்பறையில் இருந்து கேரள வனப் பகுதிக்கு யானைகள் இடம் பெயா்ந்துவிட்டதால் எஸ்டேட் தொழிலாளா்கள் நிம்மதியடைந்துள்ளனா்.
ஆண்டுதோறும் செப்டம்பா் மாதம் துவங்கி நான்கு மாதங்களுக்கு வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். வால்பாறை பகுதியில் உள்ள வனங்கள் கேரள மாநில வனத்துடன் இணைந்து இருப்பதால் செப்டம்பா் மாதம் நூற்றுக்கணக்கான யானைகள் வால்பாறை வனத்துக்குள் வருவது வழக்கம்.
கடந்த நான்கு மாதங்களாக வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டதோடு, அவைகள் பல்வேறு சேதங்களையும் ஏற்படுத்தி எஸ்டேட் தொழிலாளா்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வந்தன.
இதனிடையே தற்போது யானைகள் கேரள வனத்துக்குள் இடம் பெயா்ந்துவிட்டதால் எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் குறைந்துள்ளதால் தொழிலாளா்கள் நிம்மதியடைந்துள்ளனா்.