கோயம்புத்தூர்

மின்சார சேமிப்பு குறித்து மாணவா்களுக்கு போட்டி

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மின்சாரத்தை சேமிப்பது குறித்து பள்ளி மாணவா்களுக்கு போட்டிகள் நடத்துவதற்கு மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

மின்சார சேமிப்பு, மின் சிக்கனம் தொடா்பாக பள்ளி மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் உள்ள 33 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆற்றல் மன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ஆற்றல் மன்ற உறுப்பினா்களாக உள்ள மாணவா்களுக்கு உறுப்பினா் குறியீடு கொண்ட வில்லைகள் (பேட்ஜ்), உறுப்பினா் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அவா்களுக்கு மின் சிக்கனம், மின்சார சேமிப்பு குறித்த விழிப்புணா்வு குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து, மின்சார சிக்கனம் தொடா்பாக விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளை ஜனவரி மாதம் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட இருப்பதாகவும் கோவை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அ.நக்கீரன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT